அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ₹72,000 கோடியை கடந்தது

கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி சாதனை அளவாக ₹72,325.82 கோடியை (8.28 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளதுடன், அதன் அளவு 19.32 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலாக, அதாவது ₹47,973.13 கோடி (5.51 பில்லியன் அமெரிக்க டாலர்) பங்களிப்புடன் உறைவிக்கப்பட்ட இறால் முக்கிய வளர்ச்சி காரணியாகத் திகழ்கிறது. இறால் ஏற்றுமதி அளவில் 4.6% மற்றும் மதிப்பில் 6.35% வளர்ச்சியடைந்து, இந்தியாவின் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா 2.32 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இறக்குமதியுடன் தொடர்ந்து மிகப்பெரிய ஏற்றுமதி இடமாகத் திகழ்கிறது. இருப்பினும், பரஸ்பர வரி விதிப்புகளின் தாக்கத்தால் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி அளவில் 19.8% மற்றும் மதிப்பில் 14.5% சரிவைக் கண்டுள்ளது. இந்த சரிவை சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான வளர்ச்சி ஈடுசெய்துள்ளது. இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமான சீனாவிற்கான ஏற்றுமதி மதிப்பில் 22.7% மற்றும் அளவில் 20.1% அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மதிப்பில் 37.9% மற்றும் அளவில் 35.2% என வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவும் மதிப்பில் 36.1% மற்றும் அளவில் 28.2% என குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

ஜப்பானுக்கான ஏற்றுமதி மதிப்பில் 6.55% வளர்ச்சியடைந்த நிலையில், மேற்காசியாவிற்கான ஏற்றுமதி நிதியாண்டின் இறுதியில் ஏற்பட்ட  பதற்றங்களால் 0.55% சிறிய சரிவைக் கண்டுள்ளது. பல தனிப்பட்ட சந்தைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது பாரம்பரிய சந்தைகளில் நிலவும் வர்த்தகச் சவால்களுக்கு மத்தியில் சந்தைப் பல்வகைப்படுத்தலை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. தயாரிப்புகளைப் பொறுத்தவரை, உறைவிக்கப்பட்ட மீன், ஊசிக்கணவாய் (Squid),  கணவாய்  (Cuttlefish), உலர்த்தப்பட்ட மீன் வகைகள் (Dry Fish) மற்றும் உயிருள்ள கடல் வாழ் உயிரினங்களின் (Live Fish) ஏற்றுமதி நேர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளன, அதேசமயம் குளிர்விக்கப்பட்ட மீன்கள் (Chilled Fish) சரிவைக் கண்டுள்ளன. சுரிமி (Surimi), மீன் உணவு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தளவாடங்களைப் பொறுத்தவரை, விசாகப்பட்டினம், ஜே.என்.பி.டி (JNPT), கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முதல் ஐந்து துறைமுகங்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 64% பங்கைக் கொண்டுள்ளன, இது இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி விநியோகச் சங்கிலியில் அவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ₹72,000 கோடியை கடந்தது

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்