இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

இன்று டில்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கு கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்தக் கூட்டத்தைக்  காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி), ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம்,

“டில்லியில் நடைபெறும் பொதுக்கூட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கானது அல்ல  அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கானது. அதனால்தான் இதை ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொதுக்கூட்டம் என அழைக்கிறோம். இந்த பொதுக்கூட்டம் எந்த ஒரு கட்சியின் கூட்டமும் அல்ல. சுமார் 28 கட்சிகள் இதில் ஈடுபடுகின்றன. இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், ஆதரவையும் பற்றிய வலுவான செய்தியை இந்த கூட்டம் ராம்லீலா மைதானத்தில் இருந்து லோக் கல்யாண் மார்க்குக்கு (பிரதமர் இல்லம்) அறிவிக்கும். விலைவாசி உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் உயர்வு, பொருளாதாரப் பாகுபாடுகள், சமூக பிளவுகள், விவசாயிகளுக்கான அநீதி போன்றவை இந்த கூட்டத்தில் எழுப்பப்படும். எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு பிரச்சினையாக முன்வைக்கப்படும். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகக் குறிவைக்கும் முயற்சியில் 2 முதல்-மந்திரிகள் மற்றும் பல மந்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் முடக்குவதற்குப் பிரதமர் விரும்புவதை காட்டுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காங்கிரசை வரி பயங்கரவாதத்தால் குறிவைப்பது போன்ற பிரச்சினைகளும் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்படும். எங்களுக்கு மேலும் 2 வருமான வரித்துறை நோட்டீசுகள் வந்துள்ளன. இந்த பொதுக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். பா.ஜனதா தலைவர்கள் அதை மாற்றி எழுத விரும்புவதால், அது ஆபத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.