இந்திய ரயில்வே சாதனை எண்ணிக்கையில் கூடுதல் ரயில்களை இயக்கம் : 2024 கோடைப்பருவம்

பயணிகளின் வசதியை உறுதி செய்யவும், கோடைக் காலத்தில் பயணத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும் , இந்திய ரயில்வே கோடை காலத்தில் 9111 முறை ரயில்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

2023ம் ஆண்டு கோடைக் காலத்துடன் ஒப்பிடும்போது கணிசமான உயர்வைக் குறிக்கிறது, சென்ற ஆண்டு  மொத்தம் 6369  முறை ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு  2742 முறை அதிகரித்துள்ளது.   இது பயணிகளின் கோரிக்கைகளை திறம்பட பூர்த்தி செய்வதற்கான இந்திய ரயில்வேயின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க கூடுதல் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன, கூடுதல் ரயில்கள்  முக்கிய ரயில் பாதைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்கின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களிலிருந்து கோடைகால பயண அவசரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா முழுவதும் பரவியுள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் இந்தக் கூடுதல் பயணங்களை இயக்கத் தயாராக உள்ளன.

இருப்புப்பாதை   மண்டல ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட  ரயில் பயணங்கள் மத்திய இரயில்வே                 488
கிழக்கு இரயில்வே                254
கிழக்கு மத்திய ரயில்வே      1003
கிழக்கு கடற்கரை ரயில்வே 102
வட மத்திய இரயில்வே         142
வடகிழக்கு இரயில்வே           244
வடகிழக்கு எல்லை ரயில்வே  88
வடக்கு இரயில்வே                 778
வடமேற்கு இரயில்வே           1623
தென் மத்திய ரயில்வே         1012
தென்கிழக்கு இரயில்வே        276
தென்கிழக்கு மத்திய ரயில்வே 12
தென்மேற்கு இரயில்வே          810
தெற்கு ரயில்வே                        239
மேற்கு மத்திய ரயில்வே          162
மேற்கு இரயில்வே                  1878
மொத்தம்                            9111 கூடுதல் ரயில்களைத் திட்டமிடுதல் மற்றும் இயக்குதல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், இதற்காக ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில்களின் தேவையை மதிப்பிடுவதற்காக பி.ஆர்.எஸ் அமைப்பில் காத்திருப்பு பட்டியல் பயணிகளின் விவரங்களைத் தவிர, ஊடக அறிக்கைகள், சமூக ஊடக தளங்கள், ரயில்வே ஒருங்கிணைந்த உதவி எண் 139 போன்ற அனைத்து தகவல் தொடர்பு சேனல்களிலிருந்தும் உள்ளீடுகள் எடுக்கப்படுகின்றன. இந்தத் தேவையின் அடிப்படையில், ரயில்களின் எண்ணிக்கை மற்றும் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. ரயில்களின் எண்ணிக்கையோ அல்லது கூடுதல் ரயில்கள்  இயக்கும் பயணங்களின் எண்ணிக்கையோ முழு பருவத்திற்கும் நிலையானதாக இல்லை.

கோடை காலத்தில், ரயில் நிலையங்களில் குடிநீர் இருப்பதை உறுதி செய்ய மண்டல ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் விரிவான கூட்ட நெரிசல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை முறையாக  ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க இந்த நிலையங்களில் மூத்த அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொது வகுப்பு பெட்டிகளில் நுழைவதற்கான வரிசை முறையை உறுதி செய்வதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் புறப்படும் இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த பகுதிகளை உன்னிப்பாக கண்காணிக்கவும், பயணிகளுக்கு உடனுக்குடன் உதவி செய்யவும் சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறையில் திறமையான ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடும் நெரிசல் காலங்களில் நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, நடைமேம்பாலங்களில் கூட்டத்தைச் சீராக ஒழுங்குபடுத்த அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் வசதியான பயண அனுபவத்தை வழங்க இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. பயணிகள் இந்தக் கூடுதல் ரயில்களில் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி வலைத்தளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

இந்திய ரயில்வே சாதனை எண்ணிக்கையில் கூடுதல் ரயில்களை இயக்கம் : 2024 கோடைப்பருவம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400