இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து முதலிடம்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது.  அதில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த உயர்க்கல்வி நிறுவனங்களுக்காக தேசிய அளவிலான பட்டியலில் கடந்த 4 ஆண்டுகளாகவே  ஐஐடி மெட்ராஸ்  முதலிடம் பிடித்திருந்த  நிலையில்,  5வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது.

பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்  தேசிய அளவில்  ஏராளமான  கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அதன்படி சென்னை ஐஐடி முதலிடமும், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு ஐஐஎஸ் கல்லூரியும், டெல்லி ஐஐடியும் உள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் மும்பை ஐஐடியும், ஐஐடி கான்பூரும் இடம்பெற்றுள்ளன.

இந்த தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  இடம் பிடித்துள்ள தமிழக கல்வி நிறுவனங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.  டாப் 100-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த பொறியியல் கல்லூரிகளில் திருச்சி ஐஐடி 9வது இடத்திலும்,  அண்ணா பல்கலைக்கழகம் 16 வது இடத்திலும் , கல்லூரிகளில்  சென்னை மாநிலக்கல்லூரி 3வது இடமும்,  கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடமும்,  சென்னை லயோலா கல்லூரி 7வது இடமும் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து முதலிடம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்