இந்தியாவை வாட்டி வதைத்த 122 வருடத்தில் இல்லாத வெப்பம் !

1901ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மிகவும் வறண்ட, வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைக் கடந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 123 ஆண்டுகளாக இருந்ததைவிட மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி, “இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்கான பருவமழையில் ஆகஸ்ட் மாதம் பெரிய அளவுக்கு மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட 35% மழைப்பொழிவு குறைவாக உள்ளது.

1901 க்குப் பிறகு இந்தியாவின் சராசரி மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகஸ்ட் 2023 இல் பதிவானது. இதேபோல இரண்டாவது குறைந்தபட்ச வெப்பநிலையும் கடந்த ஆகஸ்டில் தான் பதிவாகியிருக்கிறது. பருவமழை போதி அளவு இல்லாது அதிக வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மழைப்பொழிவு பெரும்பாலும் இயல்பானதாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தன்னார்வ வானிலை அறிவிப்பாளரான மகேஷ் பலாவத் கூறுகையில், “எல் நினோ காரணமாக, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதல், வங்காள விரிகுடாவில் வானிலை அமைப்பை பாதித்துள்ளது. இதன் விளைவாகவே பருவமழை குறைந்துள்ளது” என்கிறார். “இருப்பினும், இம்முறை மலையடிவாரத்தில் அதிக மழைப்பொழிவு இருந்திருக்கிறது” என்றார். காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக சீரற்ற வானிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் மே மாதம், தலைநகர் டெல்லியில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் நிலவியது என்பது குறிப்பிடதக்கது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

இந்தியாவை வாட்டி வதைத்த 122 வருடத்தில் இல்லாத வெப்பம் !

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை