ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.
6-வது சுற்று முடிவில் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அவர் 46,179 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 16,777 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,443, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 386 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்






