ஊழலை ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது என்பதில் மத்திய அரசு உறுதி – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

ஊழலை  ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது  என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்று அவர் அளித்துள்ள பதிலில், அரசின்  நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வரவு வைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வெளிப்படையான முறையில் வழங்குதல், மின்னணு முறையில் பொது கொள்முதல் டெண்டரை செயல்படுத்துதல், அரசின் மின்னணு சந்தை மூலம் கொள்முதல்  செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.மத்திய அரசின் குரூப் ‘பி’ (அதிகாரப்பூர்வமற்ற அதிகாரி பணியிடம்) மற்றும் குரூப் ‘சி’ பதவிகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் நேர்காணல் நடவடிக்கையை நிறுத்துதல், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான நடைமுறையில் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்குவதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், திருத்தி அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை  ஊழல்களைத் தடுக்க உதவும் என்றும்  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஊழலை ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது என்பதில் மத்திய அரசு உறுதி – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட