கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார் – நெல்லை திமுக எம்.பி-க்கு நோட்டீஸ் !

திருநெல்வேலி திமுக எம்.பி.ஞானதிரவியம், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள கடிதத்தில் , திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், திமுக வளா்ச்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக திமுக தலைமைக் கழகத்திற்கு புகாா்கள் வந்தன.

அவரது இந்த செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த அவரிடம் விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டது. இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் திமுக தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனறு கடிதத்தில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார் – நெல்லை திமுக எம்.பி-க்கு நோட்டீஸ் !

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி