அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவ தலித்துகளுக்கு ஆதராக சட்டமன்றத்தில் மசோதா: ஆதிதமிழர் பேரவை வரவேற்பு

சென்னை:
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க கோரி சமூக நீதி காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா ஒன்றியத்தில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்கள் தங்களின் மீதான இழிவை ஒழித்து மாண்புக்கான வாழ்வைத்தேடி பல்வேறு மதங்களுக்கு மாறி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இந்து, சீக்கியம், பௌத்தம் உள்ளிட்ட மதங்களில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியும். கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் நடைமுறையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் சலுகைகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் இவர்களுடைய வாழ்க்கை தரம் பெரிய அளவில் மாறவில்லை.
இந்தியா ஒன்றியத்தில் எந்த மதங்களுக்கு வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் சாதி மாற முடியாது இந்து மதத்தில் எந்தெந்த காரணங்களுக்காக இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டனவோ அது போன்று சாதி மாற முடியாது என்று சொன்னால் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சாதி மாறாது என்ற அடிப்படையில் அதே சலுகைகள் வழங்குவது தான் சரியாக இருக்கும் இதுவே சமூக நீதியாகும்.
ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும் எங்களின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 70 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்ற மதம் மாறிய கிறிஸ்துவ மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
மேலும் மதம் மாறிய கிறிஸ்துவ மக்கள் குறித்து நியமிக்கப்பட்ட நீதி அரசர் கே.ஜி.பாலகிருஷ்ணனின் குழுவிற்கு இது வலு சேர்க்கும்.
ஒடுக்கப்பட்ட மக்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களான அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியில் சம நீதியை நிலை நாட்டியதைப் போன்று மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற சிறப்புமிக்க இந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை உளமாற வரவேற்கிறது.
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியல் சமூக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்த சமூகநீதி காவலர் மாண்புமிகு தளபதியார் தலைமையிலான திராவிட மாடல அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை ஆதித் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

கிறிஸ்தவ தலித்துகளுக்கு ஆதராக சட்டமன்றத்தில் மசோதா: ஆதிதமிழர் பேரவை வரவேற்பு

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை