கிறிஸ்தவ தலித்துகளுக்கு ஆதராக சட்டமன்றத்தில் மசோதா: ஆதிதமிழர் பேரவை வரவேற்பு

சென்னை:
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க கோரி சமூக நீதி காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா ஒன்றியத்தில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்கள் தங்களின் மீதான இழிவை ஒழித்து மாண்புக்கான வாழ்வைத்தேடி பல்வேறு மதங்களுக்கு மாறி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இந்து, சீக்கியம், பௌத்தம் உள்ளிட்ட மதங்களில் வாழ்கின்ற பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியும். கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால் நடைமுறையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் சலுகைகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் இவர்களுடைய வாழ்க்கை தரம் பெரிய அளவில் மாறவில்லை.
இந்தியா ஒன்றியத்தில் எந்த மதங்களுக்கு வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் சாதி மாற முடியாது இந்து மதத்தில் எந்தெந்த காரணங்களுக்காக இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டனவோ அது போன்று சாதி மாற முடியாது என்று சொன்னால் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சாதி மாறாது என்ற அடிப்படையில் அதே சலுகைகள் வழங்குவது தான் சரியாக இருக்கும் இதுவே சமூக நீதியாகும்.
ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும் எங்களின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 70 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்ற மதம் மாறிய கிறிஸ்துவ மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
மேலும் மதம் மாறிய கிறிஸ்துவ மக்கள் குறித்து நியமிக்கப்பட்ட நீதி அரசர் கே.ஜி.பாலகிருஷ்ணனின் குழுவிற்கு இது வலு சேர்க்கும்.
ஒடுக்கப்பட்ட மக்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களான அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியில் சம நீதியை நிலை நாட்டியதைப் போன்று மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற சிறப்புமிக்க இந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை உளமாற வரவேற்கிறது.
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியல் சமூக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்த சமூகநீதி காவலர் மாண்புமிகு தளபதியார் தலைமையிலான திராவிட மாடல அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை ஆதித் தமிழர் பேரவை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கிறிஸ்தவ தலித்துகளுக்கு ஆதராக சட்டமன்றத்தில் மசோதா: ஆதிதமிழர் பேரவை வரவேற்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட