சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் : தமிழ்நாடு அரசு தகவல்

 முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் பெரியார் நகரில்  கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. கொளத்தூர் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து அதற்கான அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி,  ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது.

இந்த  மருத்துவமனையின் தரைத் தளத்தில் தீவிர சிகிச்சை, நவீன சலவையகம், வாகன நிறுத்துமிடம் வசதிகள் இடம்பெறும். முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. 2, 3-ம் தளங்களில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட வார்டு, முழு உடல் பரிசோதனை, குழந்தைகள் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 4, 5, 6-ம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டு, கேத் ஆய்வகம் அமைக்கப்படுகின்றன. கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 75 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்து உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டடம்! – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி – கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் : தமிழ்நாடு அரசு தகவல்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்