சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் : தமிழ்நாடு அரசு தகவல்

 முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் பெரியார் நகரில்  கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. கொளத்தூர் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து அதற்கான அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி,  ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது.

இந்த  மருத்துவமனையின் தரைத் தளத்தில் தீவிர சிகிச்சை, நவீன சலவையகம், வாகன நிறுத்துமிடம் வசதிகள் இடம்பெறும். முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. 2, 3-ம் தளங்களில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட வார்டு, முழு உடல் பரிசோதனை, குழந்தைகள் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 4, 5, 6-ம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டு, கேத் ஆய்வகம் அமைக்கப்படுகின்றன. கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 75 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்து உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டடம்! – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி – கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் : தமிழ்நாடு அரசு தகவல்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.