சென்னை:
ஜனநாயகத்தின் 4ம் தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை துறை. ஆனால் இந்த துறையிலும் சில தேவையற்ற விஷயங்கள் உள்ளே நுழைந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு அங்கீகார அடையா அட்டை வழங்குவதில் பாரபட்சமான நிலையை பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கொண்டுவந்துவிட்டனர். இதற்கு அக்ரடேஷன் கமிட்டியும் செவி சாய்த்தது வேதனையான விஷயம். இதனால் சிறிய பத்திரகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு அங்கீகார அடையாள அட்டை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு செய்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் அகில இந்திய சிறு குறு பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவருமான பி.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்திருந்த கடிதத்தின் பேரில் பத்திரிகையாளர்கள் நலன் கருதி உடனடியாக அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க ஆவன செய்த தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா
சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்






