சென்னை:
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் காண்ட்ராக்ட் வேலை செய்து வருபவர் திருநாவுக்கரசு (வயது. 62). சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த இவர் இன்று மதியம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார்.
அப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டவர் 2, மூன்றாவது மாடியில் இருந்து ஏசி திடீரென கழண்டு திருநாவுக்கரசு தலையில் விழுந்து உள்ளது. இதனால் தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்தார். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் திருநாவுக்கரசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





