சென்னையில் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 27.11.2024 முதல் 12.1.2025 வரை 17 நாட்கள் 48வது புத்தகக் காட்சியானது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் நடத்தியது. 900 ஸ்டால்கள், லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் என பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப் புத்தக அறிவுத் திருவிழாவில், சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா, உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருகைப் புரிந்து புதிய புதிய நூல்களை வாங்கி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு சுமார் 20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தப் 2025 புத்தகத் திருவிழாவில், பபாசி சங்கம் சிறந்த நூலகர் விருதினை முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி விருது வழங்கும் கடந்த 10.01.2025 மாலை 6 மணிக்கு புத்தகக் காட்சி அரங்கில் நடைபெற்றது. விருது விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், முனைவர் இரா.கோதண்டராமன் அவர்களுக்கு சிறந்த நூலகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். நிகழ்வில் பபாசி சங்கத் தலைவர் திரு.சேதுசொக்கலிங்கம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புத்தக ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சென்னையில் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட