சாதிய வன்முறையை கண்டித்து சைதாப்பேட்டையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அருந்ததியர் இனத்தை சேர்ந்த முத்தையா என்கிற வாலிபர் மாற்று சாதி பெண்ணை காதலித்ததால் கடந்த 23.7.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இதனை ஆணவக் கொலை என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல் கடந்த கடந்த 5ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதல் ஜோடியான வெவ்வேறு இனத்தை சேர்ந்த மகாலட்சுமி – மாரி முத்து ஆகியோர் காட்டுக்குள் கால்கள் தரை தட்டியவாறு தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செயய் வேண்டும். கடந்த 9ம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பழங்குடியினத்தை சேர்ந்த சின் னதுரை என்கிற 12ம் வகுப்பு மாணவன், அவரது தங்கை, தாத்தா ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்ட னர். இதுபோன்ற சாதிய வன்முறையை தடுக்க அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.
கல்விக் கூடங்களில் சாதிய அடையாளங்களை அணிந்துவர தடை விதிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் ஆர்.எஸ.எஸ். அமைப்பின் மாணவர்களுக்கான அனைத்து விதமான பயிற்சி பட்டறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் மீது அரங்கேறும் வன்கொடுமைகளை மாதந்தோறும் விசாரித்து, அரசிடம் அறிக்கை அளிக்கும் வகை யில் உளவியலலாளர்கள், சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், கிறிஸ்தவ மக்கள் களம், மக்கள் அதிகாரம், அம் பேத்கர் பொதுவுடைமை முன்னணி, திராவிடர் விடுதலை கழகம், சிபிஐ- எம்.எல் ரெட் ஸ்டார், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தலித் விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தலித் அறிவுசார் குழு, தமிழ் வழிக் கல்வி இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேச இறையாண்மை, தாயக மக்கள் கட்சி, இந்திய கிறிஸ்தவ பெண்கள் களம், பெண்ணுரிமை இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, சுய ஆட்சி இயக்கம் உள்பட அமைப்புகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சாதிய வன்முறையை கண்டித்து சைதாப்பேட்டையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை