தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை !

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம், பர்கூர், ஆலப்பட்டி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம், கட்டக்குளம், செமினிபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அலங்கியம், குண்டடம், மூலனூர், கன்னிவாடி, தளவாய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி, புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம் பகுதிகளில் கனமழை பெய்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் காலை முதல் வெயில் சதமடித்து கொண்டிருந்த வேளையில் மாலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை !

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச