தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை !

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம், பர்கூர், ஆலப்பட்டி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, பாண்டியராஜபுரம், கட்டக்குளம், செமினிபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அலங்கியம், குண்டடம், மூலனூர், கன்னிவாடி, தளவாய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி, புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம் பகுதிகளில் கனமழை பெய்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் காலை முதல் வெயில் சதமடித்து கொண்டிருந்த வேளையில் மாலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை !

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி