தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

வேளாங்கண்ணி:
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். மது ஒழிப்பு பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழ்நாடு மதுவால் தத்தளித்து வருகிறது.
ஆனால் மதுவுக்கு எதிராக ஒரு கிராமத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்ப்போம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், “பொதுமக்கள் கவனத்திற்கு… நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.
இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்… ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவி வரும் நிலையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழக அரசு சார்பில் இந்த கிராமத்துக்கு “மது ஒழிப்பில் சிறந்த கிராமம்“ என்கிற விருது வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பணக்கார பெண்களே குறி… போதைக்கு அடிமையாக்கி அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்… நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?

கோவை:கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை

தவெக அரசை கணடித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தஞ்சாவூர்:விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம்

தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

வேளாங்கண்ணி:போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இதற்காக

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு

புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி

தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

பணக்கார பெண்களே குறி… போதைக்கு அடிமையாக்கி அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்… நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?

கோவை:கோவையில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு முக்கிய காரணமான போதை அரக்கன் குற்றவாளி அரவிந்தை

தவெக அரசை கணடித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தஞ்சாவூர்:விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்சினையில் மெத்தனம்

தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

வேளாங்கண்ணி:போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இதற்காக

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு

புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி