சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையில் ரயில் நிலையம் முதல் உஸ்மான் சாலை வரை இருபுறமும் கடைக்காரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து பாதசாரிகளை நடக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள். தட்டிக்கேட்டால் அடாவடித்தனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?






