அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு.. சென்னையில் இருந்து மதுரைக்கு மக்கள் பெரும் அதிர்ச்சி…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, சொந்தபந்தங்களுடன் இணைந்து ஒருவருக்கொரு இனிப்புகளை வழங்கி வாழ்த்து சொல்வது வழக்கம்.

மக்கள் புது துணிகளை வாங்க கடைகளில் குவிந்து வருவதால் துணிக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதேபோல் இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளும் மக்கள் கூட்டத்தால் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமையில் வருவதால் தீபவாளிக்கு மறு நாளான வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு விடுமுறை

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக தமிழக அரசு, ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதேபோல் தெற்கு ரயில்வே மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய ரயில்வேயும் ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் விமானங்களில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

நேர சேமிப்பை கணக்கில் கொண்டு மக்கள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறையைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக அனைத்து விமான நிறுவனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு.. சென்னையில் இருந்து மதுரைக்கு மக்கள் பெரும் அதிர்ச்சி…!

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ