வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் தேக்கங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.