பங்குச் சந்தை சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது….

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது. சர்வதேச முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டது. இந்த வாரத்தின் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் இன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.45% வரை சரிந்து முடிந்துள்ளன. பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையானது.

பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2% ஏசியன் பெயிண்ட்ஸ் 1.9%, பவர்கிரிட் பங்கு 1.7% விலை குறைந்தன. என்.டி.பி.சி., இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், நெஸ்லே இந்தியா, விப்ரோ, எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி பங்குகளும் விலை குறைந்தன. எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல், எச்.டி.எப்.சி. உள்ளிட்ட 10 பங்குகள் விலை உயர்ந்து கைமாறின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் சரிந்து 18,771 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. புதிய உச்சம் தொட்ட மறுநாளே சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பங்குச் சந்தை சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது….

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி