சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 2024 ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரையிலான செல்லத்தக்க விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை. அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், கடந்த 11-ந்தேதி ரம்ஜான் பண்டிகை, 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பு. 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி இந்தமுறை மாதாந்திர சலுகை மற்றும் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டையின் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்





