பாதுகாப்பு அமைச்சகம்

azadi ka amrit mahotsav

இந்தியா அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்

प्रविष्टि तिथि: 28 NOV 2025 1:08PM by PIB Chennai

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை மாறிவரும் உலகளாவிய சூழலில் சமநிலை மற்றும் பொறுப்புணர்வு மிக்க நாடுகளின் குரலாக மாறியுள்ளன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுதில்லியில் 2025 நவம்பர் 28 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தோ-பசிபிக் மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவை நம்பகமான நட்பு நாடாகக் கருதுகின்றன,” என்று தெரிவித்தார்.

இந்தியா இன்றைய சூழலில் உலகளாவிய விவாதங்களை பொறுப்புணர்வு, உத்திசார் தன்னாட்சி மற்றும் நாகரிக விழுமியங்களில் வேரூன்றிய நம்பிக்கையுடன் வடிவமைத்து வருகிறது. மேலும் இந்தியா மீதான நன்மதிப்பு, உலக நாடுகளின் நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும், புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள், நாடுகளின் இறையாண்மை மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கமைப்பிற்கு மதிப்பளித்து செயலாற்றுவதே அதன் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

பயங்கரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவு, தற்போதைய நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்ற புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் சவால்களுக்கு உறுதியான விழிப்புணர்வு மற்றும் தெளிவு நோக்கங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சீர்திருத்த நடவடிக்கைகள் தேர்வை விட ஒரு உத்திசார் தேவையாக மாறி வருகின்றன என்றார். சீர்திருத்தங்கள் நிறுவனங்களின் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், ஆயுதப்படைகளின் செயல்திறனையும் மேம்படுத்துகின்றன. மேலும் வலிமையான, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரு ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.

Share on twitter

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

பாதுகாப்பு அமைச்சகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக