புதினா பொடி ரெசிபி செய்யலாமா?

இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் தனித்தனியாக பொடி வைத்திருப்போம். ஆனால், இவை அனைத்திற்கு ஏத்த புதினா பொடி பற்றி தெரியுமா?. இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் இந்த ஒரு பொடி போதும்!
புதினா போடி எப்படி அரைப்பது என பார்க்கலாம். இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதம் என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் புதினா பொடியை எப்படி தயார் செய்வது?

தேவையான பொருட்கள்:

புதினா – 1 கட்டு.

கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்.

மிளகு – 1/2 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

வெந்தயம் – 1/4 ஸ்பூன்.

வர மிளகாய் – 10.

மல்லி விதை – 2 ஸ்பூன்.

பூண்டு பல் – 5.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
புதினா கார பொடி செய்வதற்கு முன்னதாக, பொடி செய்ய எடுத்துக்கொண்ட புதினாவை நன்கு சுத்தம் செய்து, தண்டை நீக்கி இலைகளை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
தற்போது, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் மல்லி விதைகளை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே எண்ணையில், காரத்திற்கு ஏற்றார் போல 5 வர மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வர மல்லி விதைகள் உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர், சிறிதளவு எண்ணெயுடன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து வறுக்கவும். வாசம் மாறும் நிலையில் இதனுடன், புதினா, பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால், தேங்காயை துருவி ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
புதினா வதங்கியதும் அடுப்பை அணைத்து, சேர்மத்தை சூடு இல்லாமல் நன்கு ஆறவிடவும். பின்னர், இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர், இதேப்போன்று மல்லி விதைகள் – பருப்பு சேர்மத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு உப்புடன் சேர்த்து பொடியாக அரைக்கவும். வீட்டில் உள்ள காய்ந்து போன புதினா இலைகளையும் பயன்படுத்தலாம்.பின்னர் இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்த்து ஒருமுறை அரைத்துக்கொள்ள புதினா கார பொடி ரெடி.
பொடியாக அரைத்து வைத்துள்ள இந்த புதினா கார பொடியுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். பின்னர், இந்த பொடி சேர்மத்துடன் இட்லி, தோசை, வெள்ளை சாதம் என உங்களுக்கு பிடித்த உணவினை சேர்த்து பரிமாறலாம். சாதத்துடன் சாப்பிடும் போது இதில் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்துக்கொண்டால் சுவை அதிகரிக்கும்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

புதினா பொடி ரெசிபி செய்யலாமா?

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.