புழல் சிறையில் பெண் கைதிகளை வைத்து செயல்பட உள்ள பெட்ரோல் நிலையத்தின் கட்டுமான பணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.
புழல் சிறையில் பெண்களுக்கான சிறை அருகே ஃப்ரீடம் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் நிலையம் ஆனது சுமார் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1170 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாகவே ஆண் கைதிகளுக்காக புழல் சிறை அருகே ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டு அதனை சிறைவாசிகள் நிர்வகித்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான பெட்ரோல் நிலையம் புழல் சிறை அருகே கட்டப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.








