பொதுவாக நாம் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நிற்பது வழக்கம். காற்று அடித்து கொண்டுருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும், வாடிக்கையாளர்களிடம் முகம் சுளித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞரிடம் வண்டியை “இப்படி நிறுத்து அப்படி நிறுத்து” என்று கூறியவர் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து, மரியாதை குறைவாக ஏய்யா காத்து அடிக்கறதே ஓசியில். இதுல வேற ஏன்யா இப்படி போட்டு படுத்தற” என்றார். உடனே அந்த இளைஞன்“ “ஐயா எங்க வண்டிகளுக்கு நீங்க ஓசியில எல்லாம் காத்து அடிக்கல ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டிசலுக்கும், பெட்ரோலிய நிறுவனம்.., ஐம்பது பைசாவை கழிவரையை சுத்தம் செய்யவும் வருகிற வாகனத்திற்கு காற்று அடிக்கவும் தருகிறது”. எங்கள் பணத்திலிருந்து…, “இனி யாரிடமும் ஓசி என வார்த்தையை விடவேண்டாம் முதலில் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவன மேலாளரிடம் கேட்டுத்தெரிந்து தெளிந்து, வரும் வாகன ஓட்டிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்”. என்று, விவரம் கூறியது மட்டுமின்றி
பங்க் மேலாளரை அழைத்து புகார் வேண்டிவரும் என்று அந்த இளைஞரு் கூறினார்.
நண்பர்களே நாம் நம் வாகனத்திற்கு அடிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹ 2.50 ரூபாய் கமிஷனாகவும் மேலும் ஐம்பது பைசா கழிவரையை பராமரிக்கவும் காற்று அடித்துக்கொள்ளவும் பங்க் நடத்தும் ஏஜென்ஸிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது.
இந்த வசதியை வாடிக்கையாளருக்கு செய்து தர மறுக்கு பெட்ரோல் பங்க் மீது ஒரு வாடிக்கையாளர் மெயில் மூலம் புகார் அளித்தல் அந்த பங்க் தற்காலிகமாக பெட்ரோலிய பொருட்கள் சப்ளை செய்வதை எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிடும்.! பிறகு உங்கள் சமாதான பதில் மெயிலுக்கு, பிறகே பங்க் விற்பனையை தொடங்கும், ஆகவே நண்பர்களே நாம் கார் பயணமோ அல்லது இருசக்கர வாகன பயணமோ ஒரு வாடிக்கையாளருக்கு கழிவரையை மற்றும் காற்று அடிக்கவும் மறுக்கும் பங்க் மீது அங்கே பெயர் பலகையில் குறிப்பிட்டுருக்கும் மெயில் ஐடிக்கு புகாரளியுங்கள் …. உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.








