இம்பால்: இடஒதுக்கீடு தொடர்பாக கலவரம் நடைபெற்ற மணிப்பூரின் முர்ரே நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அங்கு புதிதாக ஹெலிபேட் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகளை பார்வையிட மணிப்பூர் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் முர்ரே நகருக்கு நேற்று சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த குகி சமுதாயத்தை சேர்ந்த தீவிரவாதிகள் அந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்த் குமார்பலத்த பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து குகி தீவிரவாதிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






