மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது

புதுதில்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற  மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. மத்திய தொழிலாளர் இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐந்து அமர்வுகளில், பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலா 5 மாநிலங்கள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. பயிலரங்கின் போது நடந்த விவாதங்களின் அடிப்படையில், இந்தக் குழுக்கள் தங்களுக்குள் ஆலோசனைகளை நடத்தி, தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நிலையான மாதிரியை 2025 மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கும்.இப்பயிலரங்கில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வெளிப்படுத்திய சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினார். அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை வடிவமைக்க மாநில அரசுகளுடன் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்றும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஓய்வூதியம், சுகாதாரம், ஆயுள், விபத்து காப்பீடு போன்றவற்றை வழங்கும் முழுமையான மற்றும் நீடித்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான அதாவது கட்டடம் மற்றும் கட்டுமானப் பணிகள், பிற துறைகளில் உள்ளவர்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களுக்கு நிலையான சமூக பாதுகாப்பு மாதிரிகளை உருவாக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இணைத்ததில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்களுடனான 2 நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.