மாநகராட்சி அதிகாரிகள் தகவல் – சென்னையில் 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது…

சென்னையில் மழை காரணமாக 127 இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும் 6 இடங்களில் மரங்கள் சாய்ந்துயுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை காரணமாக சென்னையில், 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 6 மரங்கள் விழுந்துள்ளன. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுவரை 158 புகார்கள் வந்துள்ளன. சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் மழை நீரை வெளியேற்ற 593 பம்புகள் தயார் நிலையில் உள்ளன என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று

மாநகராட்சி அதிகாரிகள் தகவல் – சென்னையில் 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது…

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று