சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் மின் கசிவால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்தன. காந்தா என்பவருக்கு சொந்தமான இந்த 2 குடிசை வீடுகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பங்கள் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வேலை சென்ற நிலையில் திடீர் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.








