சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். அதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரித்தனர்.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த உச்சம்பாறையை சேர்ந்த 30 வயதான இசக்கிமுத்து என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், அவர் ஏற்கனவே இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது. தற்போது முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இசக்கிமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்





