ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீரஜ்குமார் (வயது 32). இவர் தெற்கு ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், பணி நிமித்தமாக சென்டிரலில் இருந்து மின்சார ரெயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். இவர் ரெயில் பெட்டியின் வாசலில் கதவு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மின்சார ரெயில், பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் வந்தபோது தீரஜ் குமார் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முற்பட்டார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், நடைமேடைக்கும், மின்சார ரெயில் பெட்டிக்கு இடையில் அவரது ஒரு கை மற்றும் ஒரு கால் சிக்கி கொண்டது. கை மற்றும் காலை எடுக்க முயன்றபோதும் அவரால் முடியவில்லை. இதனால், அவர் வலியால் அலறித்துடித்தார். தொடர்ந்து ரெயில் நிற்காமல் சென்று கொண்டிருந்ததால் கை மற்றும் கால் முழுவதுமாக துண்டானது. இதைப்பார்த்த பயணிகள் ஓடிவந்து அவரை தூக்க முற்பட்டனர். ஆனால், அவரை மீட்க முடியாமல் சிரம்மபட்டனர். இதுபற்றி அங்கிருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தீரஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியர் பலி…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்