வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் : மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை, அங்குள்ள உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து. மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா மனு அளித்தார்.

இந்நிலையில், மணிப்பூரில் வரும் 22-ந்தேதி(நாளை) 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலில் 72 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

வாக்குச்சாவடிகளில் மிரட்டல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் : மணிப்பூர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.