விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் உயிரை காக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை: டீன் தகவல்

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை தன்மை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவமனையின் டீன் மரு. நாராயணசாமி தலைமை தாங்கினார். ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது டீன். நாராயணசாமி விபத்து காயம் குறித்து விளக்கி பேசுகையில், சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களில் 10 சதவீதம் பேருக்கு முதுகு தண்டுவட எலும்பு மற்றும் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால் அசைக்க முடியாமல் சுவாசத்திற்கு உதவும் சதை செயல் இழக்கவோ நேரிடுகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிரமாக செயலாற்றி வருகிறது.
விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நோக்கில் உயர்தர மருத்துவ குழு தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக இலவச தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் நோயாளியின் கழுத்தின் 7வது எலும்பு முறிவு சிறப்பு திறன்மிக்க அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவ கண்காணிப்பு சோதனைகள் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கபடுகிறது. இதன் காரணமாக 2-3 மாதங்களில் நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றார்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் உயிரை காக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை: டீன் தகவல்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.