காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் உடற்கல்வித் துறை சார்பாக நடத்தப்படும் இரண்டு நாள் அகில இந்திய இன்டர் என்ஐடி காலண்டர் கருத்தரங்கின் தொடக்க விழா இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர், கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். மேலும் இக்கருத்தரங்கில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 31 தேசிய தொழில்நுட்பக்கழங்களில் 15 தேசிய தொழில்நுட்பங்களைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்கள் தங்கள் தடகள போட்டிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அகில இந்திய இன்டர் என்ஐடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வருகின்ற 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய இன்டர் என்ஐடி போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், அட்டவணை தயார் செய்தல் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களை விவாதிப்பதற்காக இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தையும் மூத்த மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு அலுவலர் முனைவர். S. பாபு துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்.