மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சிட்டீஸ் திட்டத்தின்கீழ். அடையார் மண்டலம். வார்டு 170, ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை தொடக்க/உயர்நிலைப்பள்ளி மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கோட்டூரிலிருந்து பங்கேற்று பள்ளி வளாகத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) திருமதி.சரண்யா அரி மண்டலக்குழுத்தலைவர் துரைராஜ், 170வது வார்டு உறுப்பினர் கதிர் முருகன். தலைமை ஆசிரியர்/கூடுதல் கல்வி அலுவலர்மகேஸ்வரி கல்பனா, செயற்பொறியாளர் புருஷோத்தம்மன் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





