தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை 2026 மார்ச் 15 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி, அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான அறிவிப்புகள், கொள்கை முடிவுகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்த்தும்.அரசு, பொது மற்றும் தனியார் சொத்துகளில் எழுதப்பட்டுள்ள அரசு மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்களை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியினர், வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நபர் அரசுக்கு சொந்தமான இடங்கள் அல்லது வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுத்தல், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடுத்தல் போன்றவைகளையும் கண்காணித்து உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. தனியார் கட்டட உரிமையாளர்களின் அனுமதியின்றி கொடிகள், பதாகைகள் அல்லது சுவரொட்டிகளுக்காக அவர்களுடைய கட்டடங்களைப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களை மக்களும், அரசியல் கட்சியினரும் சி-விஜில் செயலி மூலம் அளிக்கலாம். அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளை தேர்தல் பணியுடன் இணைப்பதோ அல்லது அரசு எந்திரம், போக்குவரத்து அல்லது நபர்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியினர் கூட்டங்களை நடத்துவது தொடர்பாக  போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு