அதிமுக உட்கட்சி பூசலை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது: வி.கே.சசிகலா

சென்னை:
சாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,, திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். சட்டப்பேரவைக்குத் திரையரங்குக்கு வந்து செல்வது போல் வந்து செல்கின்றனர்.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டால், நிச்சயம் சந்திப்பேன். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு ஒபிஎஸ் எனக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன். கொடநாடு வழக்கை திமுக அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் ” எனக் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

அதிமுக உட்கட்சி பூசலை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது: வி.கே.சசிகலா

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு