அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல சுற்றுகள், பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் களம் மாறலாம்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. இவற்றில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்பார்.

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்திற்கு 54 வாக்குகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையில் போட்டி கடினமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு என்பதை கணிப்பதை சிரமம்.

வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 19 மாகாணங்களிலும், கமலா ஹாரிஸ் 3 மாகாணங்களிலும் முன்னிலை இருக்கின்றனர். ட்ரம்ப் இன்டியானா, கென்டக்கி, மேற்கு விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுவிட்டார்.

ட்ரம்ப் முன்னிலை: இதில் இண்டியானா மாகாணத்தில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், கென்டக்கியில் 8 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், மேற்கு விர்ஜினியாவில் 4 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் இருக்கின்றன. தெற்கு கரோலினா, ஜார்ஜியா, ப்ளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ் வெற்றி: அதுவே கமலா ஹாரிஸை எடுத்து கொண்டால் வெர்மண்ட் மாகாணத்தில் வெற்றி பெற்றுவிட்டார். விர்ஜினியா, நியூ ஹாம்ஸ்ஷைர் உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பெற்ற வாக்குகள் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப் 46,71,232 வாக்குகளும் (54.6 சதவீதம்), கமலா ஹாரிஸ் 38,16,312 வாக்குகளும் (44.6 சதவீதம்) பெற்றிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு