மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்சுப்ரியா சாகு. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர்அருண்தம்புராஜ்.பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் பூபேஷ் சுஷில் ராகுல் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவப் பேராசிரியர்கள்,உயரலுலவர்கள் கலந்து கொண்டனர்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





