எக்ஸ்மவுத்:
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதனை திரளான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
ஆஸ்திரேலியாவில் சூரிய கிரகணம் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டின் வடமேற்கு கடற்கரை பகுதியான எக்ஸ்மவுத் நகரில் முழு சூரிய கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நகரில் சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில், சுமார் 20,000 பார்வையாளர்கள் கிரகணத்தை பார்வையிட குழுமி இருந்து கிரகணத்தை பார்வையிட்டனர்.
இதேபோல் இந்தோனேசியா மற்றும் திமோர் தீவின் கிழக்கு பகுதி என சில பகுதிகளிலும் இந்த முழு சூரிய கிரகணம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கிரகணத்தை பார்க்கும் ஆர்வத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் எக்ஸ்மவுத் நகரின் நிலபரப்பில் கூடாரம் அமைத்து, கேமரா மற்றும் தொலைநோக்கியும் கையுமாக வான் நோக்கி பார்த்தபடி கடந்த நாட்களாகவே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை ஓரளவு மட்டுமே பார்க்க முடிந்தது.
“இது மிகவும் அரிதான கிரகணம் என்பதாலேயே இதனை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






