இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே தீவிரத்துடன் உள்ளதாக இந்திய மாநில மையம் அறிவித்தது. இதற்கு சாதகமாக வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை கொடுத்தது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை ஆந்திரா அருகே கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திரா பக்கம் நகர்ந்ததால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பயங்கர இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை குறித்து முன்னறிவிப்புகளை வெளியிடும் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பெல்ட் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதாக தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலும் சில இடங்களில் டமால் டுமீல் கிடைக்கும் என இடி மின்னலை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மழை சாமானியர்களின் இன்ப மழை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை