.
இந்திய அஞ்சல் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Skilled Artisan பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்திய அஞ்சலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இதில் Skilled Artisan பணிக்கென 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Skilled Artisan பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் விவரம் :
Skilled Artisan பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (13.05.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்






