இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி

இந்திய இராணுவ சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி 4.1.2024 முதல் 13.1.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில், (பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள் சேர்ப்பு பேரணி) நடைத்தப்பட உள்ளது.

இப்பேரணியில் கலந்து கொள்ளும் தமிழகத்தினை சார்ந்த விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்வில் கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். ஆனால் இத்தேர்வுக்கு தேவையான அசல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களை தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அறியாமல் இருப்பதால் கடின முயற்சி எடுத்தும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத
காரணத்தால் அவர்கள் தேர்வு செய்யப்படாத நிலை காணப்படுகிறது. எனவே, 4.1.2024 முதல் 13.1.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பேரணியில் தகுதியுள்ள
இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறும், அவ்வாறு கலந்து கொள்ளும் தமிழகத்தினை சார்ந்த மாணவர்கள் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் சென்னை-32, கிண்டியிலுள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அனுகலாம் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு