இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை.
இதனால், இலங்கைக்கு உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார உதவி போன்ற பல்வேறு முக்கிய உதவிகளை இந்தியா செய்து வருகிறது. மேலும், தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில், இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனை, அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவியாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் இலங்கை நம்புகிறது.






