இன்றைய பங்குசந்தை நிலவரம் !

மும்பை:
இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 796 புள்ளிகள் (1.18 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,800 ஆக இருந்து வந்த நிலையில் தேசிய பங்குச்சந்தையிலும் நிஃப்டி 231 புள்ளிகள் (1.15 சதவீதம்) வீழ்ந்து 19,101 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:16 மணி வரை, சென்செக்ஸ் 618.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,978.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 124.05 புள்ளிகள் சரிந்து 20,009.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு காரணமாக முதலீட்டாளர்களிடம் இருந்த எச்சரிக்கை உணர்வு, லாபம் குறித்த உந்துதல் காரணமாக பங்குச்சந்தைதள் ஏற்ற இறக்கத்துடனேயே பயணித்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவு இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 796 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,800.84 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 231.90 புள்ளிகள் வீழ்ந்து 19,901.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, டிசிஎஸ் பங்குகள் உச்சத்தில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, எஸ் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சியுடன் காணப்பட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இன்றைய பங்குசந்தை நிலவரம் !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட