அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

உச்ச நீதிமன்றம்: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை…

புதுடெல்லி: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அபாய அளவை எட்டிஉள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை. பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும்.

பட்டாசு தடையை டெல்லி போலீஸார் முறையாக அமல்படுத்தவில்லை. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று டெல்லி அரசு கடந்த அக். 14-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அப்போதே டெல்லி போலீஸார் பட்டாசு விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டாசு விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதை தடுக்க சிறப்பு பிரிவை டெல்லி போலீஸ் கமிஷனர் ஏற்படுத்த வேண்டும். இந்த சிறப்பு பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும்.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்துடெல்லி அரசு வரும் 25-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். பட்டாசு தடையை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் வரும் 25-ம் தேதிக்குள் விரிவான பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பட்டாசு தடை தொடர்பாக டெல்லியின் அண்டை மாநிலங்கள் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

உச்ச நீதிமன்றம்: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர