உலக கிரிக்கெட் 2023 வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம்…

உலக கோப்பை கிரிக்கெட் 2023 தொடருக்கான வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐசிசி ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெறும். அதற்கான கோப்பை அறிமுகம் விண்வெளியில் நடந்துள்ளது. பிரத்யேக பலூன் ஒன்றின் மேல் வைக்கப்பட்ட கோப்பை பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் வளிமண்டலத்தில் விளிம்பில் கோப்பை நிலை நிறுத்தப்பட்டது. இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை வரும் செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு திருபிவரும்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெயிஷா, விளையாட்டு போட்டி ஒன்றின் கோப்பை முதன்முறையாக விண்வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து நேரடியாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பை வந்து இறங்கியது. முதல் போட்டியானது அக் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நவம்பர் 19ம் தேதி போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில், 8 அணிகள் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்பட 6 நாடுகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பது குறிப்பிடதக்கது..

இந்த சுற்றின் முடிவில் பைனலுக்கு முன்னேறும் 2 அணிகள் ஐசிசி உலக கோப்பையில் விளையாடும். அந்த 2 அணிகள் எவை என்பது ஜூலை 9ம் தேதிதான் தெரியவரும். இந்த நிலையில் ஐசிசி நிர்வாகிகள் இன்று மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் 13வது உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை முழுமையாக வெளியாகும் என்று தெரிகிறது..

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

உலக கிரிக்கெட் 2023 வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம்…

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்