அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் தமிழ்நாடு மன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று காலை கழக நிறுவனத் தலைவர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





