கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் நேற்று நியாயவிலைக்கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.வினய்குமார் மீனா உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, உட்பட பலர் உள்ளார்கள்.






